சென்னை மாநகரில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மாலை 4 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொன்னேரி துரைநல்லூர்: கவரப்பேட்டை, பண்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேடூர், புளிகாட், திருப்பலிவனம், ஏவூர், மங்கலம் மற்றும் அதற்கு மேல் சுற்றியுள்ள பகுதிகள்.


இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், கனமழை காரணமாக சென்னையில் உள்ள 44.50 லட்சம் மின் இணைப்புகளில் 12,297 மின் இணைப்புகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்றார். 


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 11-ஆம் தேதி மாலைக்குள் கரையைக் கடக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது.


இந்த வானிலை இன்று (நவம்பர் 11) மாலைக்குள் புதுச்சேரிக்கு வடக்கே காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்றும் (வியாழக்கிழமை) எதிர்பார்க்கப்படும் கடுமையான மழைக்கு முன்னதாக IMD சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.


சென்னை மாநகர் முழுவதும் பரவலாக 6 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்யும் மழை. நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR