சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழையால் மக்கள் சிரமத்துக்குள்ளாயினர் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இந்நிலையில், சென்னையில் நேற்று மழை காரணத்தால் கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் சுவர் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. இன்று காலை சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் சேதம் அடைந்தன.