25 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகாதாரத்துறை சார்பில் சுமார் 25 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடக்க விழா தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த வாகன சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  


மேலும், குடும்ப நலத்துறை சேவைக்காக 9 புதிய ஜீப் வாகனங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.