சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தேர்வாவது உறுதியாகிவிட்டது என்று அதிமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுகவின் பொதுச் செயலாளராக சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகல தான் என்று அதிமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் உறுதி செய்துள்ளார்.


ஜெயலலிதாவின் புகழுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்று பொன்னையன் இன்று கூறியுள்ளார்.


அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாநில அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


சசிகலா தான் அதிமுகவுக்கு அச்சாணி. அவரைத் தவிர வேறு ஒருவர் பொதுச் செயலாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பொன்னையன் கூறியுள்ளார்.