தமிழகத்தில் மே 31 வரை பயணிகள் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் தொடங்கக்கூடாது என மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் COVID-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர்களுடனான வீடியோ கான்ப்ரசிங் போது மாநிலத்தில் பயணிகள் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் மே 31 வரை மீண்டும் தொடங்கக்கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (மே 11) பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டார். 


54 நாள் நாடு தழுவிய பூட்டுதல் முடிவடையும் தருவாயில் மத்திய அரசு சார்பில் வெளியான அதிகாரப்பூர்வ வெளியீடு, டெல்லியில் இருந்து சென்னை மற்றும் சென்னையிலிருந்து டெல்லிக்கு வழக்கமான ரயில் சேவை மே 12 முதல் தொடங்கும் என்று தெரிவித்த நிலையில், தற்போது பழினிசாமியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் நேர்மறையான வழக்குகள் அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு 31.5.2020 வரை ரயில் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும் "31.5.2020 வரை வழக்கமான விமான சேவைகளையும் தொடங்க வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


மார்ச் மாதத்தில் தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 50 நாள் இடைவெளிக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டெல்லியில் இருந்து ராஜதானி பாதையில் செவ்வாய்க்கிழமை முதல் 15 ரயில்கள் நாட்டின் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளன.


எனினும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாநிலத்திற்கான பயணிகள் சேவையினை தடை செய்யுமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.