தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்டு 50 ஆண்டுகளை எட்டிய நிலையில், "தமிழ்நாடு" பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என முதல்வர் அறிவிப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், நமது மாநிலம் "தமிழ்நாடு" என்று பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு "தமிழ்நாடு" பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.


முன்னதாக நேற்றைய கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது, இந்த மசோதாவிற்கு எதிர்பு தெரிவித்து திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்ககது!


கடந்த ஜன., 8 ஆம் நாள் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாளை வரை இக்கூட்டத்தொடர் நடைப்பெறவுள்ளது.