தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் (Terre Des Homes Core Trust) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் திரு. செழியன் அவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் ராஜீவ் காந்தி மானவ் சேவா விருது வழங்கியதையடுத்து, அவருக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறிய விவரம் பின்வருமாறு:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளை பிச்சையெடுத்தலில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளித்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக Terre Des Homes Core Trust  என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் தங்களின் பணியினை அங்கீகரித்து, மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால், ராஜீவ் காந்தி மானவ் சேவா விருது (Rajiv Gandhi Manav Seva Award) வழங்கப்பட்டதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 


இந்த விருதினை பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வருங்காலங்களிலும் தன்னார்வ சேவையில் சிறப்பாக சேவையாற்றி, பல விருதுகளை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.