சட்டசபையில் நடக்கும் வாக்கெடுப்பில் ஆதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிப்பார்கள் என அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோருகிறது. கூவத்தூரில் இருந்து ஆதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்கள் கார்களில் பலத்த பாதுகாப்புடன் வந்துள்ளனர்.
ஒவ்வொரு அமைச்சரின் காரிலும் சுமார் 5 எம்.எல்.ஏக்கள் வரை அடைத்து வைத்துக் அழைத்து வரப்பட்டுள்ளனர்.


இதையடுத்து இன்று கூடும் சட்டசபையில் நடக்கவுள்ள நம்பிக்கை தீர்மானத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிப்பார்கள் என அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.