தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பில் சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு, அது தொடர்பாக விசாரிணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், விசாரணை ஆணையம் இது நாள் வரை இடைக்கால அறிக்கை அல்லது இறுதி அறிக்கை என எதுவும் தாக்கல் செய்யவில்லை.  ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள் என பரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படும் நிலையில், இன்னும் விசாரனை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆணையத்தின் பதவிக்காலம்  தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய இந்நிலையில், சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.  விசாரணையை விரைவில் முடித்து வைத்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி,  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


ALSO READ | வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்


அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இன்னும் மூன்று மாத காலத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழக அரசு ஆறு  வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.


 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் விசாரிக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | சென்னை IITல் அதிர்ச்சி; எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR