சென்னை: தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,204 ஆக அதிகரித்துள்ளது. 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 7 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10,745 ஆக உள்ளது.


ALSO READ |  உச்சம் தொடும் கொரோனா மூன்றாம் அலை, இலக்கில் குழந்தைகள்: நிபுணர் குழு எச்சரிக்கை


தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில்1,012 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,60,419 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மொத்தமாக 1,05,832 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 875 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  



இன்றைய நிலவரம்:
• இன்றைய பாதிப்பு - 875


• இன்றைய மரணங்கள் -13


• மொத்த பாதிப்பு - 27,07,368


• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,012


• இன்றைய சோதனைகள் - 1,05,832


ALSO READ | கொரோனாவை குணமாக்கும் Molnupiravir மாத்திரைக்கு அங்கீகாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR