தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரம் இன்று வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஷ்ட் கட்சி கோவை மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஷ்ட் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற விவரங்களை தற்போது வெளியாகி உள்ளது.


மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று அறிவித்தார். முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன் கோவையிலும், எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.