சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம்,  சோராஞ்சேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்தியவாணி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்  சரவணன் தனது 7நண்பர்களுடன் சுடுகாட்டில் சூதாடி (சீட்டு) உள்ளார். இது குறித்து பட்டாபிராம் காவல் துறையினர் கிடைத்த ரகசிய தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளது. இதனை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு வந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போலீஸார் வருவதைக் கண்டு பயந்து போன சரவணன் உள்ளிட்ட நண்பர்கள் சீட்டுக்கட்டு கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓடி உள்ளனர். இதில் சரவணன் மட்டும் சுடுகாட்டு அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதில், அவர் ஆற்றில் உள்ள செடி கொடிகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர் ஜெகன் அங்கிருந்து ஓடி வந்து கிராமத்தில் உள்ள உறவினர்கள், பொதுமக்களிடம் தகவல் அளித்ததை அடுத்து, பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படகு மூலம் ஆற்றில் இறங்கி சரவணனை தண்ணீரில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர்.


ALSO READ | நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கொன்று வன்புணர்வு செய்த Serial killer


சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சரவணன் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது பிரேத பரிசோதனைக்கு எடுத்து செஅல்ல முயன்ற  சரவணனின் உடலை உறவினர்கள் அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர்.  இதனிடையே உறவினர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இதனை தொடர்ந்து காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு சரவணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூதாட்டத்தின் போது காவல் துறையினரை கண்ட அச்சத்தில் கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற நபர் வேர்களில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Also Read | 'கல்லறையில்' இருந்து வெளியே வந்த 'விரல்கள்'; நடந்தது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR