மிலாது நபி பண்டிக்கைக்கான பொது விடுமுறை டிசம்பர் 1-ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில் தற்போது மிலாது நபி பண்டிகை தமிழகத்தில் டிசம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் டிசம்பர் 2-ம் தேதி வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.


இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:-


மிலாது நபி பண்டிகை தமிழகத்தில் டிசம்பர் 2-ந்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததால் தமிழகத்தில் வங்கிகளுக்கு டிசம்பர் 2-ம் தேதி விடுமுறை விடப்பட்டும்.


இதையடுத்து ரிசர்வ் வங்கியும் டிசம்பர் 2-ம் தேதியன்று செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ், தமிழ்நாட்டில் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. 


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.