சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் திகார் சிறையில் இருந்தார். தற்போது, ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருந்து வருகிறார். அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் வீட்டு உணவு வழங்க அனுமதி கோரினார். ஆனால் நீதிமன்றமோ ஒரு வேளை மட்டுமே வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கியது.


இதனால் சிறை உணவு அவருக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர் உடல் உபாதை காரணமாக அக்டோபர் 7, 23, 25, 28 ஆகிய தேதிகளில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை மேற்கொள்ள 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கடந்த 24-ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சிபிஐ தொடர்ந்து வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருந்ததால் ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், உடல்நிலை பாதிப்பை குறிப்பிட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 


இந்த வழக்க இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வயிற்று வலி பிரச்சனைகளால் ப.சிதம்பரம் அவதிபட்டு வ்ருவதாகவும், வயிறு, குடல் சார்ந்த சிறப்பு மருத்துவம் சிதம்பரத்திற்கு தேவைப்படுவதாகவும் கூறினார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.