திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (வயது 63) இன்று அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மாலை 5 மணியளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை குறைவு காரணத்தால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அதிகாலை 2 மணிக்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.


இந்நிலையில் M.பாண்டுரங்கன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன் ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "திரைப்பட இயக்குநரும், சமூக சிந்தனையாளருமான திரு @beemji அவர்களின் தந்தை எம்.பாண்டுரங்கன் அவர்களது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.



உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தார் என்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது பிரிவால் துயரத்தில் வாடும் பா.ரஞ்சித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் #CPIM சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.