கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தென்காசியை சேர்ந்த சூர்யா(30), திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பூம்பாறை ம‌லைக் கிராமத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். அவர் டிஜேவாகவும் இருந்துள்ளார். இவருக்கும் தனது தங்கும் விடுதி அருகில்  தங்கியிருந்த சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவர் மனைவி போல் திருமணம் நடைபெறாத நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூர்யாவுக்கு மது அருந்தும் ப‌ழ‌க்க‌ம் இருந்ததாலும், அவரது நடத்தை சரியில்லாத காரணத்தினாலும் ஸ்வேதா பழக்க வழக்கத்தை நிறுத்திக் கொண்டு சென்னைக்கு சென்றுவிடுகிறார். மேலும், சூர்யா தொலைபேசி எண்ணை தனது செல்போனில் பிளாக் செய்ததுடன் வாட்ஸ் அப்பிலும் பிளாக் செய்து விடுகிறார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூம்பாறை கிராமத்தில் இருந்த சூர்யா  கொடைக்கானல் முக்கிய குடியிருப்பு பகுதியான கல்லுக்குழி பகுதியில் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். 


மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


அதேநேரத்தில் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு மீண்டும் சென்ற ஸ்வேதா, பம்பார்புரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அப்போது, சூர்யாவுக்கும் இவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இருவரும் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல்கள் பகிர்ந்து செல்போனில் பேசி நேரில் சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் சூர்யாவின் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு இருவருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்வேதா, அங்கு நடந்தவற்றை அவர்களிடம் விளக்கியுள்ளார். அப்போது, சூர்யாவுக்கு மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துஒவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மகன் இறந்த செய்தி கேட்டு அங்கு வந்த சூர்யாவின் பெற்றோர், தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஸ்வேதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆண் நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க | முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? - விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ