நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கோரிய நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்தது.  இந்த அறிவிப்பை தொடர்ந்து பல கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தியமைத்தல் போன்றவற்றிற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தமிழ் திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவருமான விஜய்காந்த் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 



அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் நடைபெற போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்து போட்டியிடும்.  அதனால் தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் டிசம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு சென்று விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.  


மேலும் அந்த விருப்ப மனுக்களை பூர்த்தி செய்த பின் அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட வேண்டும்.  உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகள், அடிப்படை உறுப்பினர்கள் தகுதியானவர்கள்" என்று கூறியுள்ளார்.


 



ALSO READ கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR