2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு தேமுதிக வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்றவேண்டும்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளன. தமிழகத்தை  பொறுத்தவரை,  'நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்' என அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இன்று கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தொகுதிகளிலும் தே.மு.தி.க போட்டியிட்டு, வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்ற வேண்டும் எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.