திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தாக்குதல். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர். 


மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் "மக்களின் செழிப்புக்கு எதிரான வாக்கு" எனவும் கூறினார்.


இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மாநில நதிநீர் பிரச்சினை மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் எந்தவித முன்னேற்றம்  திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.


இன மோதலின் போது இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் செயலற்று இருந்தது திமுக அரசு. 


ஒட்டுமொத்தமாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டனி கட்சிகள் தமிழ் நாட்டு மக்களின் நலனை காக்காது. 


ஆனால் உங்கள் கண்ணீரை போக்கியது யார் இந்த அதிமுக அரசு. எனது ஆட்சியில் ஏழைகள் பாதுகாக்க பட்டார்கள் அவர்களின் கண்ணீர் துடைக்கப்பட்டது.


எனவே வரும் தேர்தலில் எதிரிகளை வீழ்த்த அதிமுகவுக்கு வாக்களியுங்கள். அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் "இந்த வெற்றி மக்களின் வெற்றி" என்று அவர் கூறினார்.