திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்திகள் உண்மை இல்லை என திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சிறப்பு காவல் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி டி.கே ராஜேந்திரன் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றது.
 
இதனை அடுத்து திமுக மூத்த தலைவர் டிஆர் பாலுவை போனில் தொடர்பு கொண்டு பேசுகையில், அவர் கூறியதாவது: இது வெறும் வதந்தி மட்டுமே. திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறினார்.


இதே போல வதந்தி பற்றி அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியதாவது:-


 



 


தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.