தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணத்தை 5 மடங்கு உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக மின் வாரியம் 3 கோடி மின் இணைப்புகள் அளித்துள்ளது.   தற்போது 2.2 கோடி வீட்டு மின் இணப்புகள், 11 லட்சம் குடிசை  மின் இணைப்புகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது. 


கடந்த 1999ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடைசியாக உயர்த்தப்பட்டது. தற்போது, 20 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.


சென்னையில் தற்போது வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு அளிக்க ரூ.1600 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இந்தக் கட்டணம் 9800 ஆக உயர்த்தப்பட உள்ளது. மும்முனை மின் இணைப்புக் கட்டணம் ரூ.7475 ஆக உள்ளது. இது ரூ. 35000 ஆக உயர்த்தப்பட உள்ளது. கிராமப் புற மும்முனை இணைப்புக் கட்டணம் 18000 மாற்றப்பட உள்ளது.  இதேபோல் தொழிற்சாலைகள், வர்த்தக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளனர். 


காசோலைகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் காசோலை திரும்பி வந்தால் வசூல் செய்யப்படும் அபராதமும்,  துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க வசூலிக்கப்படும் அபராதமும் உயர்த்தப்பட உள்ளது.


இந்த கட்டண உயர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுற ஆணையத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆணையம் ஒப்புதல் அளித்த பின் உயர்த்த்பட்ட கட்டணங்கள் குறித்து அறிவிக்கப்படக் கூடும்.