புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம். அதன்பிறகு தேவை ஏற்ப்பட்டால் அவரை கைது செய்யலாம் என டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதி அளித்தது. நீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்துக்கு மேலும் சிக்கல் உருவாகி உள்ளது. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தாக்கல் செய்ய மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதன் நேற்று, அமலாக்க இயக்குநரகம் (ED) பண மோசடி வழக்கில் பி.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்ற வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பி.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஆட்சேபித்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரத்தை காவலில் எடுக்க அமலாக்கத்துறை கோர முடியாது என்று கூறினார். 


மேலும் நீதிமன்றத்தில் கபில் சிபல் கூறியது, ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரியது. இந்த கோரிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவரை கைது செய்ய தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி தனது வாதத்தை முன்வைத்தார். சிபிஐயின் 15 நாள் காவலுக்குப் பிறகு, தற்போது அமலாக்கத்துறையின் காவல் தேவையில்லாதது என்றும் கூறினார்.


மேலும் அவர் கூறியது, சிபிஐ போட்ட எஃப்.ஐ.ஆர் (FIR) அடிப்படையில் தான் அமலாக்கத்துறை வழக்கு வழக்கு பதிவு செய்ததாக கபில் சிபல் கூறினார். பின்னர் ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டிய தேவை என்ன? குற்றம் ஒன்றே. மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த வழக்கு தொடர்பான எதுவும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை என்றும் பி.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை நீதிமன்றத்தில் வைத்தார்.


இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை, பணமோசடி என்பது ஒரு குற்றம் என்று கூறியது. ஒரு வழக்கின் விசாரணை மற்றொரு வழக்கில் இருந்து வேறுபட்டது. சிதம்பரம் சிபிஐ காவலில் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவரை கைது செய்வதற்கும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கும் அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு. ஏனென்றால் பணமோசடி என்பது பெரிய குற்றம். ப.சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் சரணடையத் தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். இப்போது அவர் ஏன் காவலை எதிர்க்கிறார்? பணமோசடி வழக்கில், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்தது.


இருதரப்பு வாதங்களை கேட்ட ரூஸ் அவென்யூ நீதிமன்றம், சிதம்பரத்தின் கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கான தீர்ப்பை இன்று ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு, இந்த விசாரணை மீதான தீர்ப்பை நீதிபதி வழங்கினார். அப்பொழுது  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம். அதன்பிறகு தேவை ஏற்ப்பட்டால் அவரை கைது செய்யலாம் எனக்கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு அனுமதி அளித்தது.