சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரே எஸ்பிஐ காப்பீட்டு நிறுவன கிளையில் இன்று காலை திடீரென தீப்பிடித்து மளமளவெனப் பரவியது. இதனால் தொழிலாளர்கள் வெளியேறினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 3 வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை சுமார் அரைமணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். ஆனால், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் எரிந்ததால் கரும்புகை வெளியேறியது. 


மேலும் அந்த கட்டிடத்தின் வெளியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. 


குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.