திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொடைரோடு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் ரயில் தண்டவாளத்தில் 4 பேரின் உடல்கள் சிதறிக் கிடந்தன. தகவலறிந்து வந்த கொடைரோடு ரயில்வே போலீசார், உடல்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்த நால்வரும் திருச்சி மாவட்டம், உரையூரை சேர்ந்த உத்தரபதி, சங்கீதா, அபினயா, ஆகாஷ் எனவும் தெரியவந்துள்ளது.


மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து வியாபாரம் நடத்தி வந்த உத்தரபதி, கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.