திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு  பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் 11ஆம் வகுப்பு மாணவி பிரியங்கா தேவி (வயது 16) இவர் இன்று காலை அதே பகுதியில் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், பிரியங்கா தேவி அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் ரமணன் (வயது 21) என்பவரை 1 ஆண்டு காலமாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர் எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ரமணனுடன் நேற்று செல்போனில் சண்டை போட்டு கொண்டது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, நேற்று இரவு ரமணன் அவரது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து, இன்று காலை பிரியங்கா தேவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


ALSO READ | காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது


இதுகுறித்து காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ரமணனின் சடலத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும், ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த பிரியங்கா தேவி சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ALSO READ | திருநங்கையாக மாறிய மகனை அடித்து கொலை செய்த தாய்


ALSO READ | திருநங்கைகளுக்கு வீடு கட்ட ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்தார் அக்ஷய் குமார்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR