தமிழக அரசு துறையில் பணிபுரிவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைவது அவசியம் ஆகும். அதன்படி குரூப் 2ஏ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு முழுவதும் 2,536 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 1,953 காலி பணியிடங்களுக்கு 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கின்றனர்.


முன்னதாக கடந்த 5-ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என்று பேரணி நடத்தினர். எனினும், தற்போது குரூப் 2ஏ தேர்வுகள் சச்சரவின்றி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.