இன்று தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழைபெய்து வருகிறது.


இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறியதாவது:


தமிழகத்தில் அதிகப்பட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். வெப்ப சலனம் காரணமாக இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். அதேபோல மாநிலத்தின் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.