ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில், ரூ.4.5 கோடி ரொக்கம் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது.


தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டிடிவிதினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். 


ஆர்கேநகரில் பணப்பட்டுவாட செய்வதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடந்ததாகவும், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ5.13 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவுற்றதை தொடர்ந்து விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது.


சோதனையின் போது வருமானவரி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். என் வீடு மற்றும் எனது சகோதரர் வீட்டில் இருந்து எவ்வித பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. சொந்த ஊர் மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை. 


என் வீட்டிலும், சரத்குமார் வீட்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக சோதனை நடத்தப்பட்டது. ஆர்கேநகர் இடைத் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 


எனது வீட்டில் இதுவரை நடந்த சோதனையில் 10 ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. ஏ.டி.எம்.மில் இருந்தும் ரூ.10 ஆயிரம் கூட நான் எடுக்கவில்லை. அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.