வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,


குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி நீடிக்கிறது என்றும் சென்னையில் மேக மூடத்துடன் கணப்படுவதுடன் அவ்வப்போது மழை பெய்யும்.


கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்ததால் சென்னை, கடலூர், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்கள் என பல பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டது.


இந்நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.