சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகிலவாணி. இவருக்கும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சென்னகேசவன் நகரை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் தனித்தனியே வசித்து வந்தனர். இதையடுத்து கணவன் சேலத்தில் உள்ள மனைவியை பார்ப்பதற்கு அடிக்கடி சேலம் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளடைவில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் சரிவரப் பேசாமல் இருந்து வந்தனர். மேலும் கணவன் பெங்களூரில் இருந்து சேலம் வருவதை மனைவி தடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியை கண்காணித்த போது பல ஆண்களுடன் அவர் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குளான உறவை முடித்துக்கொள்ளலாம் என முரளிகிருஷ்னன் சொன்னதாக தெரிகிறது. அதை மனைவி கேட்காததால் நேற்று முன்தினம் சேலம் வந்த கணவன் நமக்குள் ஏற்பட்டுள்ள மனக்கசப்பை நாளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | தகாத உறவால் பறிபோன 4 உயிர்கள்..! பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது?


 பின்பு நேற்று காலை காடையாம்பட்டி அருகே உள்ள முனியப்பன் கோவில் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிய நிலையில் கணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.




மேலும் மனைவியை போலீசார் அடையாளம் கண்டு பிடிக்காமல் இருக்க பெட்ரோல் ஊற்றி முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை எரித்துள்ளார். விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட பாணியில் இவர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி அந்த பெண்ணின் சடலத்தை எரித்து சிதைத்துள்ளார். அதன்பின் பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் டிஎஸ்பி சங்கீதா சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதில் செல்போனில் கோகிலவாணி முரளிகிருஷ்ணனுடன் பேசியை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். 



அப்போது முரளி கிருஷ்ணன் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளிகிருஷ்ணனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் திருமணம் செய்து அதேபோல சினிமா பாணியில் மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


மேலும் படிக்க | மனைவியை கொலை செய்து பார்சல் கட்டிய கணவர்! 5 மாதத்தில் முடிந்த வாழ்க்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ