புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு குறித்து எதுவும் கூறாமலும், தேதி குறிப்பிடாமலும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் வழக்கை ஒத்திவைத்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி இரு தரப்பினரின் வாதங்களை கேட்ட பின்னர், சிபிஐ வாதத்தை கருத்தில் கொண்டு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி தள்ளுபடி செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுரேஷ் குமார் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் 15 நாள் சிபிஐ காவல் முடிந்து மீண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுத்து ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அன்று முதல் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வரை விசாரணை நடைபெற்றது. இறுதி விசாரணை நடைபெற்றதை அடுத்து இறுதி தீர்ப்பு வழங்காமல், தேதி குறிப்பிடாமல் நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். 


இந்தநிலையில், இன்று மீண்டும்  ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் வழங்கினார். அதாவது ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து டெல்லி திகார் சிறையில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.


ஏற்கனவே கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிந்ததால், மீண்டும் அவர் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்றும் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தற்போது ப.சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார். வரும் அக்டோபர் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.