முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாக கூறி, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனாத். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில், முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்.


இன்று முதல் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை தொடங்குகிறது. மேலும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி, கூடுதல் அதிகாரம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.