அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வரும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவச ஆட்டோ சர்வீஸ் செய்யப்படுவதாக அந்த பகுதியில் ஒரு ஆட்டோ இயங்கி கொண்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 


முதல்வர் உடல்நலம் பெற அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், பூஜைகள் நடத்தி வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை வளாகத்திலேயே அதிமுகவினர் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர். ஏராளமான அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு தினந்தோறும் வருகின்றன.


இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவச ஆட்டோ சர்வீஸ் செய்யப்படுவதாக ஆட்டோ ஒன்று அந்த பகுதியில் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த ஆட்டோவில் 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளதால் அங்கு உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவச ஆட்டோ சர்வீஸ் செய்யப்படும். இந்த சர்வீஸ் அம்மா அவர்கள் விரைவில் குணமடைந்து போகும் வரை நடைபெறும். அம்மா குணமடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.