கோவை: கோயம்புத்தூரில் தேவாலயதம் ஒன்றில் இயேசு கிறிஸ்துவின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிர்னிட்டி கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தின் நுழைவு வாயில் அருகே,   செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 


நேற்று (2022, ஜனவரி 23) நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் தேவாலயத்தின் நுழைவாயில் இருந்த சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.


இதுகுறித்து தேவாலயத்தின் பாதிரியார் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதற்கு முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
சிலை அவமதிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இந்து முன்னணி நிர்வாகிகள், குண்டர் தடுப்பு சட்டம்  பாய்ந்தது.


ALSO READ | பெரியார் சிலைக்கு செருப்பு மாலை! கோவையில் பரபரப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR