டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பர்கள் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக 13-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முத்துக்கிருஷ்ணனின் பெற்றோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரணமடைந்த முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார். பின்னர் அவரது உடலை சேலத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.