சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும் இன்று திருமணம் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த திருமண விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலுந்துக்கொண்டனர். 


கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருமண நிகழ்ச்சி, கடந்த 9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்க விமர்சையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிய்ல நடிகர் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். இதனையடுத்து நேற்றைய தினம் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடைப்பெற்றது.


இந்நிலையில் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சவுந்தர்யா-விசாகன் திருமணம் கோலகலமாக நடைப்பெற்றது.


திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.


நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் ஆகியோரும் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


திருமணத்தை தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.