அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தற்போது மதுரைக்கு வருகை புரிந்துள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், நாளை ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார். 


அதற்கு முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்ளை நேரில் சந்தித்து ஆசிப் பெற்று தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார்.


அந்த வரிசையில்,நடிகர் ரஜினிகாந்த், விஜய்காந்த், நல்லகண்ணு, முன்னாள் தேர்தல் அதிகாரி சேஷன் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


அதே போன்று, இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


அதோடு, நாளை ராமேஸ்வரத்தில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகிறார். 



இந்நிலையில், தற்போது மதுரையில் இருக்கும் கமல் ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது;-


நாளை நான் என் அரசியல் கட்சியைத் தொடங்குவேன், அதற்கு முன்னர் நான் ராமேஸ்வரம் சென்று சந்திப்பேன், மாலையில் கட்சியின் கொடியை நீக்கிவிட்டு, எனது அரசியல் பயணத்தின் கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களை அறிவிப்பேன் என்றார்.