கன்னியாகுமரி அருகே ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த கவின் (வயது 22). இவர் சென்னையில் உள்ள கார் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரும் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் ஆன் லைன் பப்ஜி விளையாட்டின் மூலம் நண்பர்கள் ஆயினர். நட்பு காதலாக மாறியது. கடந்த 17ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். திடீரென தனது பெண்ணை காணாததால் பதறிப்போன பெண்ணின் பெற்றோர், இது குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஐபிஎல் ரசிகர்கள் கவனத்திற்கு... மெட்ரோ நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்!


இதனை தொடர்ந்து பெண்ணின் தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டறிந்தனர். அப்போது அந்த செல் எண் சென்னையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சென்னைக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு 17 வயது சிறுமியையும், அவரின் காதலனையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் பெண்ணிற்கு 17 வயது என உறுதியானது.


பெண்ணின் பெற்றோர் பெண்ணை தங்களிடம் அனுப்பும்படி கோரிக்கை வைத்தனர். பெண்ணும் பெற்றோர்களுடன் செல்ல சம்மதிக்கவே பெண்ணை பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர். 17 வயது சிறுமியை கடத்திச்சென்று தனிமையில் இருந்ததால் கவின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் படிக்க | கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? வெளியான தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ