சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 1-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மருந்துகளால் ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த 8-ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, 


இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு மீண்டும் மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதனிடையே காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை சீராக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி எம்.பி., செல்வி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் நேற்று இரவு அவருடன் மருத்துவமனைக்கு வந்தனர்.