கரூர்:மாணவர்களுக்கு நன்னெறிகளை போதிக்கும் ஆசிரியர்களே பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  பல இடங்களில் பாலியல் குற்றங்களை செய்து ஆசிரியர்கள் கைதாகும் அவலம் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது.  இது போன்ற சில தரம் கெட்ட ஆசிரியர்களால், இந்த துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ பாலியல் தொல்லை, நகை கொள்ளை: வழக்கறிஞர் செய்யும் வேலையா இது?


கடந்த சில வருடங்களாகவே ஆசிரியர்கள் மீது பல புகார்கள் எழுந்து வருவது தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது.  அதனை தடுக்க காவல் துறையும், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இது போன்ற அநியாயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.


கரூர் மாவட்டம்  பகநத்தம் என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பன்னீர்செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார்.  சம்பவத்தன்று இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருக்கையில், ஆபாச வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி இருபாலருக்கும் பாடம் நடத்தியுள்ளார். 


இதனையடுத்து அந்த பள்ளி மாணவர்கள் எழுத்துபூர்வமாக அந்த அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவர்களின் புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  மேலும் இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


ALSO READ சட்டையை கழற்றிவிடுவேன்: பெண் போலீஸை மிரட்டிய மேஜிஸ்திரேட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR