கேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
கேரளாவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸின் அழிவு உலகிலும் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மூன்று வாரங்கள் Lockdown அறிவித்துள்ளார். இதுவரை 854 பேரில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 47 பேர் வெளிநாட்டினர். 63 பேர் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கொச்சி அரசு மருத்துவமனையில் சிக்கி பெற்று வந்த 69 வயதான முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.