தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 79.16 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 71.54-ஆகவும் விற்பனை ஆகிறது. 


இதையடுத்து, டீசல் விலை தினசரி உயர்வு மற்றும் 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.


இந்நிலையில், டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.


அதன்படி, நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றும் 2-வது நாளாகவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.  ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.