பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-20ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆன்லைன் மூலம் பதிவும் செய்யும் பணி கடந்த மே 29ம் தேதி முதல் தொடங்கியது. தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் இந்த கலந்தாய்வில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 


ஜூன் 17ம் தேதி கவுன்சலிங்கில் பங்கேற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 20ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும் ஜூலை 3ம் தேதி பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 30ம் தேதிக்குள் பொறியில் கல்ந்தாய்வுகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை வரை 1 லட்சத்துக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.