தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு சிறுத்தை குட்டியை விமானத்தில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு தாய் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகைதீன் என்பவர் கையில் மூங்கில் கூடை எடுத்து வந்தார்.


அதில் என்ன உள்ளது என்று சுங்க அதிகாரிகள் கேட்டபோது ‘வளர்ப்பு பிராணி’ உயர் ரக நாய் குட்டியை கொண்டு வருகிறேன் என்றார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கூடையை வாங்கி பார்த்தனர். அப்போது கூடைக்குள் சிறுத்தை குட்டி இருந்ததை கண்டு பிடித்தனர். இதை விமானத்தில் கொண்டு வருவதற்கு உரிய சான்றிதழ் ஏதும் இல்லாததால் அதை அங்கேயே பறிமுதல் செய்தனர்.


உடனடியாக மத்திய வன காப்பக குற்றபிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துனர். மேலும் அந்த நபரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தற்போது உரிய சான்றிதழ் எதுவும் இல்லாததால் சிறுத்தை குட்டியை தாய்லாந்து நாட்டுக்கு விமானத்தில் திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.