சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இலேசான முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.