கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் முன்னிட்டு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.  ஊழல் கட்சிகளின் அரசியல்வாதிகள் மக்களின் வரிபணதை கொள்ளையடித்து, நோட்டு என்னும் மிஷினை வைத்தும் என்ன முடியாத அளவிற்கு கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு, இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரே இடத்தில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்ற பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும், இதுவரை 300 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளது. 40 மெஷின்களும், 70 நபர்களும் 176 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த பணத்தை எண்ணி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரூ.6 ஆயிரம் போதாது... நிவாரணத்தை உடனே உயர்த்துங்க... இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?


ஒடிசா எம்பி 3 சாகுல் என்பவர் பெஸ்ட் பெங்கால், ஜார்கண்ட் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இவருக்கு சொந்தமாக மதுபான கடைகள் இருப்பதாகவும் இவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரி சோதனை  நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மக்கள் வியர்வை சிந்தி உழைக்கின்ற அரசுக்கு செலுத்துகின்ற வரிப்பணத்தை ஊழல் அரசியல்வாதிகள் இந்த பணத்தை பதுக்கி வைக்காமல் இருந்திருந்தால் நமது தேசம் பொருளாதாரத்தில் வல்லரசாக மாறியிருக்கும் என்றும் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி பெயரில் நடைபெற்று வரும் செம்மண் மணல் குவாரி வழக்கு தப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் அவரது வழக்கை முறையாக விசாரணை செய்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


தொடர்ச்சியாக திமுக காங்கிரஸ் கட்சிகள் மக்களை வரிப் பணத்தை சுரண்டி அவர்களின் ரத்தத்தை குடித்து வருகின்றனர். ஊழலுக்கு எதிரான ஒரு மாபெரும் இயக்கத்தை மக்களாகவே முன்னெடுக்க வேண்டும்,  நரேந்திர மோடி அவர்கள் ஊழலுக்கு எதிரான ஒரு மிகப்பெரும் தலைவராக உள்ளார்.   தமிழ்நாட்டிற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் பத்தாது என்றும், மிக்ஜாம் புயலை காரணம் காட்டி கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்து வருகின்றனர் என்றும், காங்கிரசும், திமுக ஊழல் அரசு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், பாரதிய ஜனதா கட்சியினர் மழையிலும் புயலிலும் களத்தில் நின்று மக்களுக்கு உதவி செய்து கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


மாநிலத் தலைவர் அண்ணாமலை கடலூரில் வருகை தரும் போது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.  இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்  மணிகண்டன் தலைமையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது, பாராளுமன்ற பொறுப்பாளர் ஹாய் சுரேஷ் கலந்து கொண்டார், மேலும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | ரூ.6 ஆயிரம் போதாது... நிவாரணத்தை உடனே உயர்த்துங்க... இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ