சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 14 வரை அமலில் உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தற்போது தளர்வுகளற்ற உரடங்கு அமலில் உள்ளது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் (Tamil Nadu Lockdown) சில தளர்வுகள் இந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் மேலும் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் கொரோனா ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.  


தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இப்போதுள்ள தளர்வுகளுடன் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


- அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


- சலூன்கள் குளிர் சாதன வசதியின்றி இயங்க அனுமதி. 


- வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.


- டாஸ்மாக் கடைகள் (Tasmac Shops) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.  


- கட்டுமானப் பொருட்களுக்கான கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.


- பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்


- தொழிற்சாலைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்


- ஏற்றுமதி பணியகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்


ALSO READ: TN Ration Update: 14 வகை மளிகை பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன்


- தொழிற்சாலைகளில் பணிக்கு செல்பவர்கள் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் இ-பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம்.


- வேளான் நிறுவனங்கள், பம்பு செட் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை செயல்படும்.


- வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 33 % பணியாளர்களுடன் இயங்கலாம்


- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20% பணியாளர்கள் பணிபுரியலாம்.


- செல்போன் உள்ளிட்ட மின்னணு கருவிகளுக்கான கடைகள் காலை 9 மணி முதல் 2 மணி வரை இயங்க அனுமதி


தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:


- தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கூடுதலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன


- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீட்டு பராமரிப்பு சேவைகளில் இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்படும்.


- ஏற்றுமதி  நிறுவனங்கள் 25 % பணியாகர்களுடன் இயங்கலாம்.


- மின்சார ஊழியர்கள், பிளம்பர்கள், கணினி, மோட்டார் தொழில்நுட்ப வல்லுனர்கள், இ-பதிவுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரியலாம்.


- கேப்கள், ஆட்டோக்கள் இ-பதிவுடன் செல்லலாம். ஓட்டுனருடன் டாக்சியில் 3 பேரும் ஆட்டோவில் 2 பெரும் பயணிக்கலாம்.


- பண்ணை உபகரணங்கள், பம்ப் செட் சேவை மையங்கள் (விற்பனை அல்ல) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்.


- ஆப்டிகல் மற்றும் ஆப்டோமெட்ரிக் விற்பனை மற்றும் சேவை மையங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.


- மட்பாண்டங்கள் மற்றும் கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை அமைப்புகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.





 



 


இவற்றைத் தவிர அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்குமாறும் தேவை இருந்தால் மட்டும் வெளியே செல்லுமாறும் தமிழக அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


ALSO READ: Tamil Nadu Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இன்று முக்கிய அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR