சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க  நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் புதிய 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.


ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் என்று முடிவு செய்தனர். இதை தொடர்ந்து இன்று காலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் 


போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.


அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலை தலைமை கழகம் சென்று நிர்வாகி மகாலிங்கத்திடம் விருப்ப மனு கொடுத்தார்.


இவர்களை தொடர்ந்து தமிழ்மகன் உசேன், வக்கீல் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின், ஏ.ஏ.எஸ். முருகன், ஆதிராஜாராம், கு.சம்பத், அஞ்சலட்சுமி ஆகியோரும் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.