“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ்  கல்லூரி கனவு புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான படிப்பில் இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சேர்க்க கோரிய வழக்கில் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக உரிய அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமாரியைச் சேர்ந்த சுரேஷ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இது குறித்து மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்படி மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் வகையில் உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரு புத்தக குறிப்பில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து அனைத்து பிரிகளும் உள்ளது.


மேலும் படிக்க | ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு; இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி


ஆனால், இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் என்ற பாடப்பிரிவு  குறித்து எந்த தகவலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  புத்தக குறிப்பில் இல்லை. இந்த படிப்பு மிகவும் வேலை வாய்ப்பு உள்ள படிப்பு, மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.


 எனவே கல்லூரி கனவு புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான படிப்பில், இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பு குறித்த தகவலை சேர்க்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


 அப்போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக உரிய அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெறலாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும் படிக்க | பொய் வழக்கை காரணம் காட்டி பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ