சென்னை: இன்று காலை சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தில ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உட்பட மாவட்டச் செயலாளர்களும் ம.தி.மு.க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது ஒருசில முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதில் ஒன்று வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ம.தி.மு.க தலைமை கழக செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே, கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்க வேண்டும் என ஆதரவாக வாக்களித்தனர். அதிகமானோர் ஆதரவு தெரிவித்ததால், துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, "துரை வைகோ நியமனம் வாரிசு அரசியல் அல்ல. துரை அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் சொல்லியிருந்தேன். ஆனால் தனக்கு தெரியாமலேயே துரை வைகோ கட்சிப் பணியாற்றி வந்துள்ளார். மேலும் கட்சினர் தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் என் மகன் அரசியலுக்கு வந்துள்ளார். தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இனி தலைமைக் கழகச் செயலாளர் என்ற முழு நேர பணியை மேற்கொள்வார் என்று வைகோ தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR